விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

ஈரானை வேவு பார்க்கிறது இஸ்ரேல்!

Posted in 1 by கணேஷ் on ஜனவரி 25, 2008

ஈரானின் அணுஆயுதத்தயாரிப்பின் மேல் இஸ்ரேலுக்கு ஒரு பயம் உண்டாகியிருப்பதாகத் தெரிகிறது. எனவே இஸ்ரேல் இந்தியாவின் துணையுடன் ஒற்றறியும் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது. அது இனி இரவு பகல் பாராமல் ஈரானைக் கண்காணிக்கும் என்று அந்த நாட்டின் பாதுகாப்பகம் தெரிவித்துள்ளது. அந்த செயற்கைக்கோளில் அதிநவீன ராடார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் TECSAR எனப்படும் இந்த செயற்கைக்கோள் உலகில் மிக அதிநவீன விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இது தயாரிக்கப்படுவதற்கும் ஏவப்படுவதற்கும் மொத்தம் பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியிருப்பதாக விண்வெளி ஆய்வுமையம் தெரிவித்துள்ளது!

மறுமொழி இடுக