எதுக்குப் படிக்கிறோம்னு தெரியுமா?

இளம் வயதினரின் நூலக நாட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் சேகரிக்கப்பட்டுள்ளது! அதுவும் பதினெட்டு வயது முதல் 30 வயது வரை இந்த நாட்டம் அதிகமாக இருந்து பின் படிப்படியாகக் குறைந்து விடுகிறதென்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது! இதற்குக் காரணம் வேலைக்கு தேர்வாகும் நோக்கத்துடனும், தங்களின் கல்வி சம்பந்தமான சிறுதிட்டங்களுக்கும் முழுமையாக அவர்கள் நூல்நிலையங்களை நாடுவதாகத் தெரிகிறது. மேலும் இணைய சேவைகளுக்காகவும் நூலங்களுக்குச் செல்கிறவர்களும் பாதிக்குமேல் உண்டு.
உண்மையிலேயே உலக அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் எத்தனை பேர் நூலகம் செல்வார்கள் என்றும் ஒரு முடிவுக்கு நம்மால் வரமுடிகிறதா…?
நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மையாகவே ஏற்றுக்கொள்ளக் கூடியன.
நிச்சயமாக உலக அறிவை வளர்த்துக்கொள்ள யாரும் செல்வதில்லை, காரணம் இணைய உலாவி மையங்களில் (Browsing Centres) அனைவரும் தங்கள் நேரங்களைச் செலவழிப்பதால்
நூலகம் செல்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவே…!
மறுமொழி ஆல் கண்ணன் — ஜனவரி 5, 2008 @ 11:51 நான்
நூலகம் செல்வது,புத்தகங்கள் படிப்பது எல்லாம் கொஞ்சம் நாளாக மறைந்துதான் வருகின்றன. குழந்தைகளுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்படுவதற்காக இன்றைய பெற்றோர்கள் நிறையவே புத்தகம் வாங்குகிறார்கள். பிள்ளைகள் படிக்கிறார்கள்.
வயதானவரர்கள் தொலைக்காட்சி சீரியல்களளைத்தான் பார்ப்பது என்று தீர்ந்து போனது மிக வருத்தப்பட வேண்டிய ஒன்று.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைய தளங்கள்தான் என்று ஆகிவிட்டது!
அன்புடன்
கமலா
மறுமொழி ஆல் kalyanakamala — ஜனவரி 6, 2008 @ 6:11 நான்