சூதாட்ட விளம்பரங்களினால் வந்த தலைவலி!
இணையத்தில் முப்பெரும் வல்லவர்களான மைக்ரோசாப்ட், யாஹூ மற்றும் கூகுள் ஆகியோர் சூதாட்டங்களுக்கு விளம்பரம் செய்ததற்கான தவறை ஒப்புக்கொண்டு கூட்டாக முப்பத்து ஒன்றரை மில்லியன் டாலர்கள் வழங்குவதாக அறிவித்துள்ளன. ஒருவருடத்திற்கு முன்பே அப்படிப்பட்ட விளம்பரங்களைத் தடைசெய்துவிட்ட போதும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த தண்டனைத் தொகையை கடந்த டிசம்பர் 19ம் தேதி புதன் கிழமை முடிவுசெய்யப்பட்டது. என்னதான் விளம்பரங்களைத் தடைசெய்தாலும் ஸ்பேம்கள் மூலமாக பலர் கவரப்பட்டு சூதாட்டக்களங்களுக்கு அழைக்கப் படுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை! இதையெப்படித் தடுக்கப் போகின்றன இந்த நிறுவனங்கள்? முடியாத ஒன்றை நினைத்து என்னபயன் என்கிறீர்களா? அதுவும் உண்மைதான்…
leave a comment