விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

உலகம் உருகுகிறது!

Posted in சுற்றுச்சூழல் by கணேஷ் on டிசம்பர் 14, 2007

கரித்துகள்களின் அளவு சுற்றுப்புறசூழலில் அதிகரித்து வருவது குறித்து அறிவியலாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். ஏற்கனவே அதன் சூட்டால் துருவப்பிரதேசங்களில் பனிக்கட்டிகள் உருகி கடல்மட்டம் உயர்ந்துவருவது அனைவரும் அறிந்ததுதான். இப்போது இன்னும் கரித்துகள்களின் அளவு அதிகரித்துவருகிறது.

அறிஞர்களின் கருத்துப்படி மக்கள் கார்பன் எனும் கரித்துகள் பயன்பாட்டை அறவே ஒழித்தால் மட்டும் போதாது வளிமண்டலத்தில் ஏற்கனவே தொழிற்சாலை, மற்றும் வாகனங்களால் உண்டாக்கப்பட்ட உமிழ்வுகளைக் குறைக்க ஒரு யுத்தி காணவேண்டுமென்று கூறியிருக்கிறார்கள்.

நிலக்கரியால் உருவாக்கப்படும் கரித்துகள்கள் மட்டும் வளியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடுகள் மேலும் பெரிய தலைவலியாய் இருப்பதுதான் கொடுமை…

பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் அதிகமாகி நிலப்பரப்பு இதனால் குறைந்து புவியே ஒருநாள் சூட்டினல் வெந்து சாம்பலாகப் போகிறது என்பது நிதர்சனமான உண்மை. நாம் மனதுவைத்தால் அதைக் கொஞ்சம் தள்ளிப்போடலாம் அவ்வளவுதான்..

4 பதில்கள்

Subscribe to comments with RSS.

  1. M.PalaniSaami said, on டிசம்பர் 20, 2007 at 10:33 மு.பகல்

    இதிலிருந்து மீள வாய்ப்பே இல்லை…
    தமிழில் ஒரு பழமொழி உண்டு

    வினை விதைத்தவன் அறுவடை செய்தே தீருவான்

    இப்படிக்கு
    பழனிச்சாமி

  2. கண்ணன் said, on டிசம்பர் 27, 2007 at 10:14 மு.பகல்

    குளோரோ ஃபுளோரோ கார்பன் (CFC), பெட்ரோல், டீசல், சுற்றுச்சூழல் மாசு, 40 மற்றும் 60 வாட்ஸ் குண்டு பல்புகள், சூரிய ஒளியிலிருந்து ஓசோன் வாயுமண்டலத்தால் தடுக்கப்படாத புறஉதா கதிர்கள் இவைகள்தான் உலகம் வெப்பமடையக்காரணம்!

  3. karthik said, on ஜனவரி 9, 2008 at 11:36 மு.பகல்

    this is the high time for all of us to make some changes. so the beginning of the change should be like we have to maintain a proper standards so that the pollution emission will be minimum. the standards like iso14000 should be made compulsary to all industries.

  4. sivakumar said, on ஜனவரி 17, 2008 at 8:47 மு.பகல்

    now i join


மறுமொழி இடுக